ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 24 செப்டம்பர், 2008

கண்ணீர் மட்டும் தானா?

நீ
நிலைத்திருக்கும் நிஜம் என்று
நினைத்தேன்!
ஆனால் கலைந்து போகும்
கனவாகிப் போனாய்....

ஒருமுறை வந்த கனவு
என்றும் மீண்டும் வருவதில்லை!...
ஏனோ நீ மட்டும்
ஆடிக்கடி கண்முன் தோன்றி
மனதை ரணமாக்குகிறாய்!!!

கலைந்து போனது
கனவு மட்டும் என்றெண்ணினேன்
வாழ்க்கையும் தான் என்று
உணர்த்தியது உன் வார்த்தைகள்!

ஏனடி  என் கனவுக்குள் வந்தாய்?
இப்போது ஏனடி கலைந்து போகிறாய்..???

சுடர் விட்டு ஓளிரும் தீபத்திடம்
காதல் கொண்டு
ஆதில் எரிந்து போகும்
விட்டில் பூச்சியாகிப் போனேன் நான்!!!!

ஏழு நாள் வாழும் பட்டாம்பூச்சிக்குக் கூட
ஆதன் வாழ்க்கையை ரசிக்கும் உரிமையுண்டு!
உன்னோடு ஏழு ஜென்மம் வரை வாழ ஆசைப்பட்ட எனக்கு
சிறகிழந்து தவிக்கும்
இந்தத் தண்டனை எதற்காக..........??

உன்னைக் காதலித்த பாவத்திற்காக
காலம் முழுவதும் எனக்கு
விதிக்கப் பட்டது
கண்ணீர் மட்டும் தானா????

இதழ்களில் புன்னகை
விரியும் போதெல்லாம்
இதயம் ஏனோ வலிக்கிறது!!!

உன் நினைவுகள்
என் காயத்திற்கு மருந்தா இல்லை
அமிலமா என்று தெரியவில்லை!
இருந்தாலும்
அள்ளி அள்ளிப் பூசிக் கொள்கிறேன்!!!!

ஏத்தனையோ தடவை சொல்லியும்
புரிந்து கொள்ளாமல் விட்டுச் சென்ற
உன்னை  நினைத்து வேதனைப்படுவது
முட்டாள்த் தனம் என்று தெரிகிறது!

ஆனாலும் அந்த முட்டாளத் தனத்தை
சேய்யாமல் இருக்க
இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை!!!!

ஏன் வேதனைகளைக் கொட்டி
எழுதிய கவிதைகளைக் கூட
பொத்தி வைக்கிறேன்!
என்றாவது நீ படித்தால்
எனக்காகக் கண்ணீர்
சிந்தக் கூடாது என்பதற்காக............