ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

எதிர்பாரா தருணத்தில்…



எதிர்பாராமல் என்னை
எதிரில் கண்டு…

ஆச்சர்யத்தில் விரியும்
உன் அகண்ட விழிகளில்
அடக்க முடியாத
சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு…

மலர்ந்திருக்கும் மகிழ்ச்சியை
மனதிற்குள் மறைத்துக்கொண்டு…

இயல்பாய் கேட்பதுபோல
“ என்ன “ என்கிறாய் !

நான் உன் முகத்தையே
உற்றுப்பார்க்க…

வெட்கம் சிந்தும் சிரிப்புடன்
சட்டென வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாய் !

நீ திரும்பிய திசையெங்கும்
திணறிச் சிதறுகிறது என்மேல்
நீ கொண்ட காதல் !

கருத்துகள் இல்லை: