ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

எனக்குப்பிடித்தது



அழுகை பிடிக்கும் எனக்கு
வேதனைகள் நீ தந்ததென்றால்
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்
இதென்ன......
மரணம்கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் தருவதென்றால்......

ரகசிய வார்த்தைகள்…



யாருக்கும் தெரியாத
சொன்னாலும் புரியாத
ரகசிய வார்த்தைகள்
சேமித்து வைத்திருக்கிறேன்
உனக்காய்…

காதோரம் சொன்னதும்
கன்னத்துக் குழி விழவெட்கிச்
சிரிப்பாய் நீ எனக்கே எனக்காய் !

சுகமான பொழுதுகள்…



ராத்திரிக்குள் அகப்பட்டநிலவைப் போல…

கூந்தலுக்குள் அகப்பட்டபூக்கள் போல…

கோவிலுக்குள் அகப்பட்டகடவுள் போல…

கருவறைக்குள் அகப்பட்டகுழந்தை போல…

உன் நினைவுகளுக்குள்அகப்பட்ட

பொழுதுகள் எத்தனை சுகமானவை !

என்ன செய்கிறாய் என்னை …



நீ கொடுத்த கடிதங்கள், பரிசுப்பொருட்கள்…
நாம் இதுவரை சந்தித்த நாட்கள்…
போட்ட சண்டைகள்…
என்று அனைத்தையும் கணக்கு தவறாது
சின்னக் குழந்தை தனது மிட்டாய்களை
எண்ணி எண்ணிப் பார்ப்பதைப்போல
கணக்கு வைத்திருக்கிறேன் எனக்குள்ளே !

இந்த பொல்லாத முத்தங்களை மட்டும்
எப்பொழுதும் எண்ணிவிட முடிவதில்லை…
ஹேய்... அப்பொழுது மட்டும்
என்னை என்ன செய்கிறாய் நீ…


கோபப் பரிசு




யார் மீதோ கொட்டமுடியாத
உன் கொந்தளிப்புகளை எல்லாம் என்மேல் ஏற்றி…

ஒட்டுமொத்த கோபத்தியும் வார்த்தைப் புயலாக்கி
என்மேல் எறிகிறாய் !

அதற்குக்கூட உனக்கு உரிமையானவன்
நானென்பதால்அதிலிருந்து எனக்கான
தென்றலை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் !

கோபம் தணிந்தபின் நீ வந்து கெஞ்சும்
கொஞ்சல்களுக்கு பரிசளிக்க அவை தேவைப்படும்…

துன்பம் வரும் வேளையில் நட்பின் ஞாபகம்!



உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ந‌ட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இ‌ந்த ஆ‌ண்டு 3ஆ‌ம் தே‌தி ந‌ட்பு ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்போகிறோம்.

ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌த் ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர்.

பெ‌ற்றோ‌ர்க‌ள், மனை‌வியை‌விட நமது து‌க்க‌த்‌‌திலு‌ம், ச‌ந்தோஷ‌த்‌திலு‌ம் ப‌ங்கு கொ‌ள்வ‌தி‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் மு‌‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கினறன‌ர். தா‌யிடமு‌ம், மனை‌வி‌யிடமு‌ம் ஏ‌ன் த‌ந்தை‌யிட‌ம்கூட ஆலோசனை செ‌ய்ய முடியாத ‌சில ‌விஷய‌ங்களை ‌ந‌ண்ப‌ர்களுட‌ன் கல‌ந்துரையாடுவத‌ன் மூல‌ம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம்.அ‌த்தகைய ‌சிற‌ப்பு ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ள் உ‌ண்டு.

உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. த‌ற்போதை வேகமான ந‌வீன காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை நாடக‌ங்க‌ளிலு‌ம், ‌‌திரை‌ப்பட‌ங்க‌ளிலு‌ம் ந‌ட்பை மையமாக வை‌த்து பல கதைக‌ள் உருவா‌க்க‌ப்ப‌ட்டு வெ‌ற்‌றி‌ப் பெ‌ற்று‌ள்ளது.

சாதி, இ‌ன‌‌ம், மொ‌ழி பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு‌வரு‌ம் இ‌ந்த நண்பர்கள் ‌தி‌ன‌த்‌‌தி‌ல், தலைமுடி நரை‌‌த்தாலு‌ம் ந‌ண்பா உ‌ன்‌னிட‌ம் நா‌ன் கொ‌ண்ட ந‌ட்பு இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்று உலகெ‌ங்கு‌ம் உ‌ள்ள வயதானவ‌ர்க‌ள்கூட இ‌ன்றைய ‌தின‌த்‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து த‌ங்களது வா‌ழ்‌த்து‌க்களை‌ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது அவ‌ர்க‌ள் ஞாப‌க‌ம் வருதே... ந‌ண்பா ஞாபக‌ம் வருதே... ப‌ள்‌ளி‌க் கால‌ங்‌க‌ளி‌ல் நா‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌ந்து சு‌ற்‌றியது. ஆ‌த்த‌ங்கரை‌யி‌ல் ‌சிறு வய‌தி‌ல் க‌ல் எ‌றி‌‌ந்து ‌விளையாடியது. மா‌ந்தோ‌ப்‌பி‌ல் மா‌ங்கா‌ய் ப‌றி‌த்து ‌தி‌ன்ற சுவையான நா‌ட்க‌ள் எ‌ன்று பழைய ‌நினைவுகளை ‌நி‌னை‌த்து‌ப் பா‌ர்‌‌த்து பூ‌ரி‌ப்படைவா‌ர்க‌ள்.ந‌ண்ப‌ர்க‌ள் ‌தின‌த்‌தி‌ல்... நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌க்க வா‌ய்‌ப்பு ‌கிடை‌க்கு‌ம் ந‌ண்ப‌ர்க‌‌ள் ஒருவரை ஒருவ‌ர் க‌ட்‌டி‌த்தழு‌வி த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர்.

தொலைதூர‌த்‌தில இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு செ‌ல்பே‌சி வ‌ழியாக குறு‌ந்தகவ‌ல் அனு‌ப்‌பியு‌ம் (எ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ்.), க‌ணி‌னி வ‌ழியாக ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் அனு‌ப்‌பியு‌ம் த‌ங்க‌ள் ந‌ட்பை பல‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்‌‌கி‌ன்றன‌ர்.

து‌ன்ப‌ம் வரு‌ம் வேளை‌யி‌ல் கடவுளை ‌நினை‌க்‌கிறோமோ... இ‌ல்லையோ... உத‌வி கே‌ட்க ந‌ல்ல ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றிய எ‌ண்ண‌ம் ந‌ம்மையு‌ம் அ‌றியாம‌ல் ந‌ம் மன‌தி‌ல் உதயமா‌கிறது. பர‌ஸ்பர‌ம் அ‌ன்பை ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் இ‌ந்த ஆ‌ற்ற‌ல் ந‌ட்பு‌க்கு ம‌‌ட்டுமே உ‌ரிய ‌சி‌ற‌ப்பா‌கிறது.

இதுநா‌ள் வரை‌யிலு‌ம், ந‌ண்ப‌ர்களே எ‌ன‌க்கு இ‌ல்லை எ‌ன்று யாரு‌ம் கூ‌றி‌‌விட முடியாது. இ‌ந்த ந‌ட்பு ‌‌தின‌த்‌தி‌ல் மு‌த்து‌க்க‌ளி‌ன் ‌சிதறலா‌ய் நமது ‌பு‌ன்னகை ந‌ம்மையு‌ம், இ‌ந்த உலகையு‌ம் ‌நிறை‌க்க‌ட்டு‌ம்.

வழிகாட்டும் ஆஃப்கான் சகோதரிகள்


நாட்டை நிர்வகிப்பதற்கும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு பெண்களால் முடியாது என்ற கருத்தை ஆஃப்கான் சகோதரிகள் உடைத்தெறிந்துள்ளனர். இது ஆப்கானிஸ்தானில் நடத்தபட்ட ஆய்வு முடிவுகள் தெளிவாக உணர்த்தியுள்ளன.
ஆஃப்கானிஸ்தான் உட்பட எல்லா நாடுகளிலும் தேச வளர்ச்சியில் பெண்கள் பங்கேற்றால், அது நாட்டை விரைவில் பலவீனமாக்கிவிடும் என்று பெரும்பாலான அரசு கொள்கை வகுப்பாளர்களும், வளர்ச்சி அமைப்புகளும் கூறி வந்தன. இது நூறு சதவிகிதம் பொய் என்பது ஆய்வில் இருந்து நிரூபணமாகியுள்ளது.
இலாப நோக்கு இல்லாத ஆய்வு நிறுவனமான ரான்ட் (RAND) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இருந்து, பெண்களின் பங்கேற்பினால் சமுதாயத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு அதிக வளர்ச்சி அடையும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்விற்கு தலைமையேற்றவரும், ரான்ட் அமைப்பின் மூத்த அரசியல் ஆய்வாளருமான செரியல் பெனார்ட் கூறுகையில், பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதுடன், அவர்களை முக்கிய பங்காற்ற அனுமதித்தால், அவர்களால் எவ்வித நெருக்கடியையும் சமாளிக்க முடியம். அத்துடன் பெண்களால் ஜனநாயகத்தை பலப்படுத்துவதுடன், வளர்ச்சி அடையவும், சமுதாயத்தை மேம்படுத்தவும் முடியும் என்று கூறினார்.
இந்த கருத்தை ரான்ட் நிறுவன ஆய்வாளர்கள் குளு குளு அறையில் இருந்து கொண்டோ, கற்பனையாகவோ கூறவில்லை. ரான்ட் நிறுவன ஆய்வாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக மதவாதிகளின் கொடுங்கோன்மை, அந்நிய படையெடுப்பால் பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆஃப்கானிஸ்தானின் மறு சீரமைப்பில் பெண்களின் பங்கேற்பை ஆய்வு செய்தனர். ஆஃப்கானிஸ்தானத்தில் பெண்கள் தேர்தலில் வாக்களித்தனர்.
அவர்கள் அரசு நிர்வாகத்தை திறமையாக நிர்வகிக்கின்றனர். லஞ்சத்துக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதிகளை ஆயுத பலத்தால் ஆட்டிப்படைக்கும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளுக்கு எதிகாக குரல் கொடுக்கின்றனர். அத்துடன் பெண்கள் மாநில ஆளுநர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர். அதிக பழைமையை போற்றி பாதுகாக்கும் பகுதிகளிலும் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
ஆஃப்கானிஸ்தானத்தில் 2002 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, பழமைவாதிகள் விமர்சனம் செய்தாலும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெண்கள் அதிக அளவு பொதுவாழ்க்கையில் ஈடுபட துவங்கி உள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் மக்களின் சமூக - பொருளாதார முன்னேற்றம், தினசரி வாழ்நிலையில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மற்றவர்களுடன் பெண்களும் தலைமை தாங்குகின்றனர். அத்துடன் முக்கியமான ராணுவ நடவடிக்கைக்கு தேவையான தகவல்களை சர்வதேச பாதுகாப்பு படைகளுக்கு வழங்குகின்றனர்.
ஆஃப்கானிஸ்தானத்தில் பெண்களின் பங்கு பற்றி தலைமை ஆய்வாளர் செரியல் பெனார்ட் கூறுகையில், தேச மறுகட்டமைப்புக்கு ஆரம்ப காலத்திலேயே பெண்களை ஈடுபடுத்தியதால்தான், விரைவாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் மறு கட்டமைப்புக்கான கொள்கை வகுப்பாளர்களும், ஆஃப்கானின் மறு சீரமைப்பில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களும், ஆப்கானிஸ்தானின் மறு சீரமைப்பு பணியில் பெண்களை ஈடுபடுத்துவது ஆபத்தானது, தற்சமயம் இவர்களை ஈடுபடுத்த வேண்டாம். பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறின.
ஆஃப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆய்வுகளும், கருத்துக் கணிப்புகளும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் ஈடுபடுவதற்கு ஆதரவு தெரிவித்தன. அத்துடன் பெண்கள் பொது வாழ்க்கையில் பங்கேற்பது ஆபத்து என்பதை விட, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அதிக பயனளிக்கும் என்று தெரிவித்தன என்று செரியல் பெனார்ட் தெரிவித்தார்.
இதில் இருந்து பழமையில் ஊறி, மதத்தின் பெயரால் பெண்களை இழி பிறவிகளாக கருதி கொடுமைப்படுத்தும் கொடுங்கோலர்கள் நிறைந்திருந்த ஆஃப்கானிஸ்தான் போன்ற நாட்டிலேயே, நாட்டின், சமுதாய மேம்பாட்டில் பெண்களை ஈடுபடுத்தினால், முழுமையான பலன் கிடைக்கும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

நட்பு தின வரலாறு!


ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருந்தாலும் நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன?
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது.எனவே எல்லோருமேக் கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.
இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகைநட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.நட்பு தின‌த்தை கொ‌ண்டாடுவ‌திலு‌ம் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.
அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும்,
மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும்,
சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும்,
பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் நமக்கு தேவையில்லாதது என்றாலும் தெரிந்து கொள்வோமே...

புகைபிடித்தலும் அதன் எச்சங்களும்..!


சிகரெட்..கெட்டப்பழக்கம் என்று தெரிந்தும் விடமுடியாமல் இன்று பலர் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்..! இங்கே இதை படிக்கும் பெரும்பான்மையோர் சிகரெட் குடிப்பவர்கள்..!
'வேண்டாம்னா பட்டுன்னு விட்டுனனும்' என்று சொல்வது ஈஸி கண்ணா..ஆனால் விடுவது அப்படி ஒன்றும் சுலபமல்ல..! புத்தாண்டு சமயங்களில் இது மாதிரி வசனங்கள் ரொம்ப பிரபலம்..!
நான் இன்றிலிருந்து சிகரெட் குடிப்பதில்லை என்று சொல்லி காலரை திருப்பிக்கொண்டு திரிவார்கள்..! எல்லாம் ஒரு வாரம் தாக்குபிடிப்பார்கள்..பின்பு மெதுவாக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சொல்லி ஆட்டத்தை முடித்த இடத்தில் இருது தொடங்குவர்கள்..!
சிகரெட்டை நிறுத்துவதற்கு மன உறுதி மட்டும் அல்ல, வேறு உதவிகளும் தேவை. சிகரெட்டுக்கு மனிதர்கள் அடிமை ஆவது அதிலிருக்கும் "நிக்கோட்டின்" என்ற பொருளுக்காக தான். அந்த நிக்கோட்டின் நம் உடலை அதிகம் சேதப்படுத்துவதில்லை. நம் உடலை சேதப்படுத்துவது புகை தான்.
புகையை நிறுத்த நினைப்பவர்கள் உடனடியாக லைட்டர், மாட்ச், ஆஷ் ட்ரே எல்லாம் குப்பையில் எறிந்துவிட வேண்டும். புகைப்பிடித்தலை நினைவு படுத்தும் எதையுமே அருகில் வைத்திருக்க கூடாது(இது உங்கள் புகை நண்பர்களுக்கும் பொருந்தும்).
இரண்டாவது கட்டமாக நிக்கோட்டின் பொருள் கலந்த சூயிங்க் கம்களை உபயோகப்படுத்தலாம். உடல் நிகோட்டினுக்காக ஏங்கும் போது எல்லாம் இந்த கம்களை சாப்பிடலாம்.
நினைவில் கொள்ளவும்: புகை பிடித்தல் உங்களுக்கு மட்டும் அல்ல, அதை சுவாசிக்கும் அனைவருக்குமே( முக்கியமாக உங்கள் மனைவி, குழந்தை) ஆபத்தானது.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் கிடைக்கும் உடனடி நிவாரணம்:
1. உங்கள் மீதும் உங்கள் உடைகள் மீது அடிக்கும் கொடுமையான பயங்கரமான சிகரெட் நாற்றம்.
2. இருமல், மூச்சு வாங்குதல்
3. குடும்பத்தினரின் பாதுகாப்பு
4. இதயத்துக்கு சற்று ஓய்வு
5. தேவை இல்லாத பண விரயத்தை தடுப்பது
நீண்ட கால நிவாரணம்:
1. நுரையீரல் புற்று நோயை தடுக்கலாம்
2. இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்
3. முக்கியமாக உங்கள் குழந்தைகளை இந்த பழக்கத்தில் இருந்து காப்பாற்றலாம்(புகைக்கும் பழக்கும் இருக்கும் பெற்றோர்களை கொண்டிருக்கும் குழந்தைகளில் 80% வரை புகைப்பவர்களாகவே இருக்கிறார்கள்)
4. முக சுருக்கத்தை குறைக்கலாம்
5. உங்கள் ஆயுளை அதிகமாக்கலாம்.

நாம் ஏன் கடவுளை நம்மவேண்டும்..?




1.கடவுளுக்காக மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் காட்சிகள் கடவுளுக்கு தெரியாதா..? இல்லை அவர் ஆதரிக்கிறாரா..?

2.அப்பாவி மக்கள் லெபனான்,இலங்கை,ஈராக் என்று கொல்லபடும்போது கடவுள் சுற்றுலா சென்றுவிட்டாரா..?

3.கடவுளை காட்டுகிறேன் என்று சொல்லி பெண்களை அனுபவித்திலும், சொத்துகள் சேர்ப்பதையும் முழுநேர தொழிலாக ஆக்கிவிட்டவர்கள் கடவுள் ஏன் தண்டிப்பதில்லை..?

4. பச்சிளம் குழந்தைகள் கொடுரமாக கொலை செய்யப்டுகிறாரகள்..! ஒரு பெண்ணை 6 பேர் பாலியல் கொடுமை செய்கிறார்கள்..!

இதை எல்லாம் கடவுளின் திருக்கண்ணுக்கு தெரியாதா..?-இல்லை..
இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றை எப்படி கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்..?

தயவு செய்து யாரும் அடுத்தபிறவியில் தண்டனை கிடைக்கும் என்ற பதிலைதரவேண்டாம்..!

அறிவியல் பூர்வமாக நிருபிக்க இயலாத ஒன்றை சொல்லாதீர்கள்.!
நம்புகிற மாதிரி சொல்லுங்க..!

English_ இங்கிலீஷ்



ஆங்கிலம் பொருளாதார வாழ்வுக்கு தேவையானதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் ஆங்கிலம் ஒரு மொழிதான். அறிவு தொடர்பான விஷயம் அல்ல.

ஆங்கிலம் தோன்றா முன்பே, அதுவே இல்லாமலும் நம்மவர்கள் இலக்கியம் என்ன வரலாறே படைக்க முடிந்திருக்கிறது. இன்னமும் முடியும்.எனக்கே கொஞ்சநாள் முன்பு கூட, ஆங்கிலத்தில் யோசித்தால் எனக்கு முளையே கிடையாதோ என்றெல்லாம் எண்ணம் வரும். அவசியம் இல்லை.

தொடர்பு மொழிக்குத்தான் ஆங்கிலமே தவிர வேறேதுக்கும் அல்ல.

நான் பார்க்கும் ஒரு சிலருக்கு கோபம் வந்தால் ஆங்கிலதில்தான் வரும். பேச தவிர்க்கும் ஒரு சிலர் ஆங்கிலதில்தான் பதில் சொல்லுவார்கள்.

இருவருக்கும் இடையிலான வித்தியாசங்கள் கூட ஆங்கிலத்தால் அளக்கப்படுகின்றன.இந்தமாதிரி எல்லாம் அதை கட்டி அழுக வேண்டியதில்லை.

"English is a language, not a knowledge"



‌வ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்!


இது ஒரு சுவார‌‌ஸ்யமான கதை.
அதாவது ஒரு த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது ‌திருமண வா‌ழ்‌க்கையை வெ‌ற்‌றிகரமாக வா‌ழ்‌ந்தத‌‌ற்கான ரக‌சிய‌ம் ப‌ற்‌றியது.
கதை ஆர‌ம்ப‌ம்...
திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த ஜோடிக‌ள் த‌ங்களது 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.ஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.
நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.
இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.
"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஷ‌ி‌ம்லா செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம்.
எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மன‌ை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது.
அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.‌
சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.
மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!
இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.
அவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள்.
அ‌வ்வளவுதா‌ன்.
அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர். ????

காதலுக்கும், கல்யாணத்துக்கும்



காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்

* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.

* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.

* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்.....

இறந்திருப்பேன்......


என்றும் உன்னை
நான் நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு
நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன் ....!

நானும் வறுமை கோட்டின் கீழ்தான் வாழ்கிறேன்...!


எப்போதும் என் கனவில் நீ
எப்போதாவது உன் நினைவில் நான்!
எப்போதும் என் மூச்சாய் நீ
எப்போதாவது உன் பேச்சில் நான்!
நானும் வறுமை கோட்டின்
கீழ்தான் வாழ்கிறேன்
உன் அன்பை
சம்பாதிக்கத் திணறுவதால் ... !

நினைவெல்லாம் நீ.....!



நினைவெல்லாம் நீ
நித்திரையில்லாமல் நான்
கனவெல்லாம் நீ
காலமெல்லாம் கண்களை மூடியபடி நான்
உணவெல்லாம் நீ
உண்ண முடியாமல் நான் நீ
மகிழ்ச்சியோடு நான்
பிரிவெல்லாம் நீ
மரணத்தோடு நான்.....

நீ புத்திசாலி.....




புத்திசாலி ஆண்கள்
முட்டாள் பெண்களைக்
காதலிப்பதுண்டு
ஆனால்
புத்திசாலிப் பெண்கள்
முட்டாள் ஆண்களைக்
காதலிப்பதில்லை
நீ புத்திசாலி.....

திருமணத்திற்கு முன்......திருமணத்திற்குப் பின்:



திருமணத்திற்கு முன்......

அவன்: ஆமாம், ரொம்பதான் பொறுத்தாச்சு

அவள்: அப்படின்னா நான் உன்னை விட்டுப் போகனுமா?

அவன்: அப்படியில்லை! அப்படி நினைக்கக் கூட செய்யாதே

அவள்: என்னை நேசிக்கிறாயா?

அவன்: நிச்சயமாக

அவள்: எனக்கு துரோகம் செய்திருகிறாயா?

அவன்: இல்லை. இவ்வாறேல்லாம் எப்படி கேட்கிறாய்?

அவள்: எனக்கு முத்தம் கொடுப்பாயா?

அவன்: ஆமாம்.

அவள்: என்னை அடிப்பாயா?

அவன்: கண்டிப்பாக இல்லை! நான் அப்படியானவன் இல்லை

.அவள்: நான் உன்னை நம்பலாமா?

அவன்: ம்...

அவள்: செல்லமே!

திருமணத்திற்குப் பின்:

கீழிருந்து மேலாக வாசியுங்கள்(திருமணத்திற்குப் பின் எல்லாம் தலைகீழாக ஆகி விடும் இல்லையா)

காதல்


'காதல்' இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். சொல்ல இயலாத பல உணர்வுகளை மனதில் எழுதிச் செல்லும் இந்த் ஒற்றை வார்த்தை.
அதிலும் துணை உடன்இருந்துவிட்டாலோ சொர்க்கம் தான். எத்தனை கஷ்டங்கள், வேதனைகள் இருப்பினும் அத்தனையும் தூசு போல் ஆகிவிடும்.உண்மையான ஆத்மார்த்தமான காதல் எதையும் எதிர்பார்க்காது, அன்பைக் கூட.
நீ அன்பு காட்டாவிட்டால் என்ன? நான் அன்பு காட்டுகிறேன், அக்கறை காட்டுகிறேன், காதலிக்கிறேன் இப்படித்தான் சொல்லும் அந்த பிரதிபலன் பார்க்காத காதல் உள்ளம். என் கண்ணின் இமைகளில் வைத்துத் தாங்கிக் கொள்வேனடி(டா) இவ்வாறாக உருக வைக்கும் காதல்.
ஆனால், தற்போதைய காதல்'கள்' (ஒரு சில காதல் தவிர்த்து) இப்படித்தான் உள்ளனவா? காதல் மாதம், மயிலிறகு மாதம் எல்லாம் சரிதான். காதல் காதலாக இருக்கிறதா இப்போது??காதலின் அடிப்படையே பிறழ்ந்து போயிருக்கும் இக்காலத்தில் எங்கு போய்காதலைத் தேடுவது? கடற்கரையிலா? இல்லை பூங்காக்களிலா? அங்கெல்லாம் போனால் காதல் கிடைக்காது.........
போதாக்குறைக்கு இந்தமீடியாக்கள் வேறு. உங்க காதலன்/காதலிக்கு என்ன பரிசு தரப்போறீங்கன்னு 'கொஞ்சும் தமிழ்'ல தொ(ல்)லைபேசுவாங்க. அப்புறம் இந்தக் கலர் உடைஅணியுங்க, இப்படி பேசுங்க உங்க 'அவங்க' கிட்டன்னு இலவசமா அறிவுரை வேறகிடைக்கும்.
அணியும் உடைகளின் நிறத்தில் தானா காதல் வாழ்கிறது. அப்படி என்றால், அதேகலரில் வருஷம் பூராவும் போட்டுட்டு இருக்கலாமே. ஏதோ அந்த ஒருநாள் மட்டும்தான் காதலை தூக்கி நிறுத்தப் போவதாகப் பேசிக்கொள்வார்கள் எல்லாரும்.
'எங்கு காணினும் காதலடா' என்று கையில் ஒரு ரோஜாப்பூவை தூக்கிக் கொண்டு (அது ஏங்க ரோஜா? ஏன் வேற பூ கொடுத்தா ஒத்துக்க மாட்டாங்களா) தனக்கான ஜோடியைத் தேடிக் கிளம்பிடுவார்கள் பையன்களும் பொண்ணுங்களும்.
கேட்டால் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தத்தான் இப்படி என்பார்கள். அந்த அன்பை ஒவ்வொரு நிமிஷமும் வெளிப்படுத்தணும். அதுக்குன்னு ஒரு தனிநாள் தேவை இல்லையே. அந்தநாளில் காதல்ங்கற பேர்ல செய்யும் அட்டகாசங்கள் இருக்கிறதே......... தாங்காது.
பார்ப்பவர்களிடம், பேசுபவர்களிடம் எல்லாம் காதல் வராது. அது யாராவது ஒருத்தர் மேலதான் வரும். அவங்க ஏத்துக்கிட்டாலும் சரி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி. அந்த அன்பு, பாசம், நேசம், காதல் எல்லாம் அப்படியேதான் இருக்கும்.
இந்த நிமிஷம் கோபப்பட்டு அடுத்த நிமிடம் மெழுகாய் உருகிக் கரைவது தான்காதல். காத‌ல‌ர்க‌ள் சேர்ந்திருந்தாலும் ச‌ரி, பிரிந்தாலும் ச‌ரி.உண்மைக்காத‌ல் என்றும் உயிர்ப்புட‌ன் இருக்கும். காத‌லும் தாய்மையும்ஒன்றுதான். அடித்தாலும் அணைத்துக் கொள்ளும்.

உண்மையிலேயே நீங்கள் காதலர்களா?




ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும், நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும், ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோ, காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல.

நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும், அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

சரி காதலன் செய்ய வேண்டியது...
உங்களுக்கு முதல் முன்னுரிமை அளித்திருப்பது.
உங்களை அவரது குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.
எதிர்காலத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பது.
எந்த ஒரு காரியத்தையும் உங்களை வைத்துக் கொண்டு செய்வது.
அவரது ரகசியங்களையும், எதிர்கால கனவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது.
உங்களது தோழிகளை கவருவதில் ஆர்வம் காட்டுதல்.
உங்களை பணி அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயற்சி
எடுப்பது.
எதிர்பாராத விதமாக பரிசுகளை அனுப்புதல்.
உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டு மழை பொழிவதும்.
காதலி செய்ய வேண்டியது....
தான் செலவிட்ட மறக்கமுடியாத நாட்களையும், நிகழ்ச்சிகளையும் உங்களிடம் பரிமாறிக் கொள்வது.
ஒரு நாள் முழுவதும் நடந்த சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் உங்களிடம் ஒப்பிப்பது.
உங்களுடனான வாழ்க்கை, குழந்தை, திருமணம், முதுமை, பயணம் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுதல்.
உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்.
உங்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அதிக நேரம் பேசுதல்.
உங்களது செயல்களைப் பற்றிய கடுமையான விமர்சனம் தெரிவிப்பது.
உங்களுடன் வெளியே செல்ல ஏதாவது ஒரு காரணம் தேடுவது.
உங்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களைப் பற்றியை கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது.
உங்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை.

இதெல்லாம் ஒரு வரைமுறைதான். இதையெல்லாம் தாண்டியும் பல காதல்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஒன்றாகவும் உங்கள் காதல் இருக்கலாம்.

காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.

அவன் என்னை காதலிக்கிறானா?


நீங்கள் ஒருவனை காதலிக்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அவனிடம் சென்று "ஐ லவ் யூ" சொன்னால் எங்கே உங்கள் மூக்கு உடைந்து விடுமோ என்று பயமாக உள்ளதா?அவன் உங்களை காதலிக்கிறானா என்று கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்.
அவன் உங்களை காதலிக்கிறான் என்றால் :
காரணமே இல்லாமல் தினமும் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வான்.
அவன் அம்மாவின் பிறந்த நாள் பரிசை தேர்ந்தெடுக்க உங்களை அழைத்துச் செல்வான்.
நாள் முழுவதும் செய்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் சொல்வான்.
அவன் உபயோகிக்கும் சென்ட், "ஆஃப்டர் ஷேவ்" ஆகியவை உங்களுக்கு பிடித்துள்ளதா என்று கேட்பான்.
ஒரே கதையை பத்து முறை சொன்னாலும் கவனத்துடன் குறிக்கிடாமல் கேட்பான். ( கேட்பது போலாவது நடிப்பான். )
உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.
நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை விட உங்களோடு இருக்க விரும்புவான்.
நீங்கள் கேட்காமலேயே அவன் அடித்த லூட்டிகளை உங்களிடம் சொல்வான்.
நீங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு குறைந்தவர் இல்லை என்பதைப் போல் உங்களைப் புகழ்வான்.
எளிதில் அவனை புண்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ உங்களால் முடியும்.
மேலே உள்ளவற்றில் ஏழுக்கு மேல் பொருந்தினால் தைரியமாக "ஐ லவ் யூ" சொல்லலாம்.
சுமார் நான்கு பொருந்தினால் காத்திருக்கவும்.
ஒன்றோ இரண்டோ பொருந்தினால் அவனை மறப்பதே நல்லது!

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்




லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்.

காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு
7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!
காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள்.

உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!
"ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது.

காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்!
ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை



கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களை தான் முழுமையா உணர முடியும்.

இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ரகசியங்கள் என்னென்ன என்று நீங்க தெரிஞ்சுக்கலாம்.

* நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான காஸ்ட்யூம்சை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்ஸ் இருக்குற மாதிரியான உடைகள் எல்லாருடைய உடல் நிறத்திற்கும் பொருந்தும்.

*நிகழ்ச்சி நடக்குற இடத்துக்கு போனதும், எங்கையாவது, ஓரமா இடம் இருக்குதான்னு தேடி பார்த்து போய் உட்காராமல், அந்த நிகழ்ச்சி நடக்கிற இடத்தோட நடுவுல போய், உங்களுக்கு அறிமுகமானவங்க கிட்ட சகஜமா சிரிச்சு பேசுங்க.

* பேசும் போது, உங்க எதிர்பக்கம் நின்னுகிட்டு பேசுறவங்களுடைய கண்களை நேரா பார்த்து பேசுங்க. அப்படி பேசும் போது, உங்களுடைய உடல்மொழி (Body Language)-யும், கவனத்துல வைச்சுக்கங்க.

*சுவர் மேலே சாய்ந்துக்கிட்டு பேசுறது, டேபிள் மேலே உட்காருவது, பேசும் போது வாயில ஏதாவது போட்டு மென்னுகிட்டே இருக்கிறது, நகம் கடிக்கறது, இந்த மாதிரியான செய்கைகள் உங்க கிட்ட இருக்கும் போது நீங்கள் ஆண்களை கவர முடியாம போறதுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு.

*அதே சமயத்துல உங்களுக்கு அறிமுகமாகிற நண்பர்கள் கிட்ட உங்களைப் பற்றியே ரொம்ப பெருமையான பேசிக்கறதும், சரியான அணுகுமுறை இல்லைங்க.

* அந்த நிகழ்ச்சியில உங்களுக்கு புதுசா, அறிமுகமாகிற ஆண் நண்பர்கள் கிட்ட, உங்களுடைய பழைய காதல் வாழ்க்கையை பத்தியோ அல்லது காதலரைப் பத்தியோ பேசாதீங்க. இது தான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம். ரெண்டு பேரும் ஒவ்வொருத்தரை பத்தி, நல்லா பேசி, மனசு அளவுல புரிஞ்சுக்கீட்டீங்க என்ற சூழ்நிலை வரும்போது நீங்க அவர் கிட்ட இந்த விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.

*நீங்க ஏதாவது நிகழ்ச்சிக்கோ அல்லது வெளி இடங்களுக்கு செல்லும் போதோ, உங்க மனசுக்கு பிடிச்ச நபரை நீங்க சந்திக்க நேரிட்டால், இந்த விஷயங்களை மறக்காம, பின்பற்ற, பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

காதலியை கவர சில வழிகள்




* எப்பொழுதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.

* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் "நெய்ல் பாலிஷ்"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

* காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா? அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க...

* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது "டேட்டிங்" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.

* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.

* தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா... அவங்க ரொம்பவே "டல்" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்


* சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.
* தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.
* சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.
* காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...
* ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...
* நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.
* எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...
* மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.

காதலர்களாகவே வாழ்வோம்


காதல் என்பது... நாம் பார்த்து பழகிய ஒரு நபர் நமக்கு ஏற்றவர், அவரது குணம், நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் நமக்கு பிடித்து அவர் இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை உணர்ந்து அவரை நேசிக்கும் அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
காதல் பிறந்தாகிவிட்டது. அப்புறம் என்ன நமக்கு நாமே பேசி, அவரைப் பற்றியே சதா சிந்தித்து, நண்பர்களிடம் அவரைப் பற்றி மட்டுமேப் பேசி, அவரது சிந்தனையில் இருந்து விலகியிருந்த நாட்களை வாழாத நாட்களில் சேர்ப்பது வரையிலான படும் அவஸ்தை இருக்கிறதே...
அவ்வளவு அருமையானதாகும்.நமக்கிருக்கும் இதே சிந்தனை அந்தப் பக்கத்தில் இருந்தாலும் சரி... இல்லாததுபோல் நடித்தாலும் சரி.... நமது காதல் பாடல் இனிமையாக காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் எந்த அலைவரிசை மாற்றினாலும்.
பின்னர் ஒருநாள் நமக்கே அசாதாரண துணிச்சல் வந்து நமது விருப்பத்தை தெரிவித்து அங்கு சில நாட்களில் தவிப்பில் விட்டு பின்னர் சம்மதத்தை சொல்லி நம்மைத் தொலைத்த நாள் இருக்கிறதே அந்த நாள்தான் நமது மறுஜென்மத்தின் பிறந்த நாளாகவே கருதப்படும்.அன்றில் இருந்து ஆரம்பமாகிறது நமது காதல் லீலைகள்.
ஒருவருக்கொருவர் பிடித்தவற்றைப் பேசித் தீர்க்க போதாத நாளில் ஊர் சுற்றுவதும், நண்பர்களுடன் அறிமுக அரட்டையும் முடிந்து ஒரு வழியாக நமது அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு வர ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம்.
பின்னர்தான் ஆரம்பிக்கிறது பிரச்சினை, பணி நிமித்தமாக நேரம் தவறுதல், குடும்ப பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் என வெடிக்கிறது எரிமலை.இந்த எரிமலை குழம்புகளில் சிக்கி சாம்பலான எத்தனையோ காதல் ஜோடிகளும் உண்டு.
இத்தனையும் தாண்டி நின்று போராடி காதல் வாழ்க்கையில் வெற்றி பெற்று திருமண பந்தத்திற்குள் நுழைந்தால் அங்கும் புயல், சூறாவளி என்று சீற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.காதலிக்கும்போது நாம் ரசித்து ரசித்து ஓய்ந்தவை எல்லாம் தற்போது சகித்துக் கொள்ளக் கூட முடியாதவைகளாக உருமாறும்.
இவையெல்லாம் எல்லோர் வாழ்விலும் நடப்பவையே...இதைத் தவிர்க்க... நாம் காதலிக்கும் நபரை நமக்கேற்றவராக மாற்றும் எண்ணத்தை கைவிட்டு, அவரை அவராகவே நாம் காதலிக்கும் வகையில் நாம்தான் மாற வேண்டும்.அவரது சொந்தங்களையும், பந்தங்களையும் தன்னுடையதாக நினைக்க வேண்டும் என்பதெல்லாம் கூட வேண்டாம், நம்முடையதாக நினைத்தாலே போதும்.
காதலிக்கும்போதே நமது இயல்பான குணங்களை வெளிப்படுத்தி, இயல்பான முறையில் பழகுதல் நல்லது. எந்தச் செயலை செய்யும் முன்பும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசிக் கொள்வதும், மற்றவர் அவரது கருத்தை வெளிப்படையாக வெளியிடுவதும் நமது காதலின் நீண்ட ஆயுளுக்கு நல்லது.
எந்த ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அதனை தாங்களாகவே சரி செய்து கொள்ளும் பக்குவம் வேண்டும். 3வது நபரின் தலையீடு எப்போதும் சரிபடாது.அவர் நமக்கானவர்... அவர் செய்யும் எந்த தவறையும் திருத்திக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு, அதனை மன்னிக்கும் கடமை நமக்கும் நிச்சயம் உண்டு என்று நினைத்துப் பாருங்களேன். பிரச்சினையே இல்லை.நண்பர்களுக்குள் மன்னிக்கவும், நன்றி கூறவும் வாய்ப்பில்லை என்பதுபோல் காதலர்களும் அவர் செய்தது தவறு என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நாம் செய்தது தவறு என்று ஒற்றுமை உணர்வை ஓங்க விடுங்கள்.
போதும் நீங்கள் தான் அடுத்த வரலாறு படைக்கும் காதலர்களாக இருப்பீர்கள்.எப்போதும் நாம் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதுபோல் காதலர்களாகவே வாழ்ந்து காட்டுவோம்.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்




பிறரை இகழ்வது : - மற்றவர்களின் தோற்றத்தை இகழ்வதையும், அவர்களைத் தங்களை விட அறிவில் குறைந்தவர்கள் என நினைப்பதையும் ஆண்கள் வெறுக்கின்றனர். அதுவும் மற்ற பெண்களைப் பற்றி பெண்கள் அதிகமாகப் பேசுவார்கள். இதற்குக் காரணம் மற்றவர்கள் தனக்கு போட்டியாக வந்து விடக் கூடாதே என்கின்ற எண்ணம் தான்.

அறிவுரை : மற்றவர்களின் அறிவுரையை யாரும் கேட்டுக் கொள்வதில்லை. ஆண்கள்- பெண்களிடமிருந்து அறிவுரை கிடைத்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.

செலவு : சில பெண்கள் , தன் பாய் பிரண்ட் மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் , தான் திருப்பி செலவு செய்யக் கூடாது என நினைக்கின்றனர். தன்னை மட்டும் செலவு செய்ய வற்புறுத்தும் பெண்களை இக்காலத்து ஆண்கள் விரும்புவதில்லை. விட்டு விலகச் செய்வார்கள்.

நம்பிக்கையின்மை : - உங்கள் பாய் பிரண்ட், உங்கள் தோழியுடன் பழகுவதை தவறாக நினைக்க வேண்டாம். அவர் மீது வைக்கும் நம்பிக்கை உங்களை அவரிடம் உயர்வாக காண்பிக்கும்.

விவாதம் : சில பெண்கள் தன் பாய் பிரண்டிடம் எதற்கெடுத்தாலும் வாதம் புரிவார்கள்(தாங்கள் சொல்வதே சரி என்பார்கள் ) இது கூட ஆண்களுக்கு கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை.

தன்னம்பிக்கையின்மை : - அவர்களோடு இருக்கும் சமயத்தில் எனக்கு எப்பொழுதும் பிரச்சினைதான் எனக்கு நிம்மதியில்லை. பாதுகாப்பில்லை என உளறிக் கொட்டுவதை நிறுத்தவும். தன்னம்பிக்கை மிகுந்த பெண்களைத் தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.

குப்பைகள் : - எப்பொழுது பார்த்தாலும் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டு இருந்தாலும், கடந்து போன விஷயங்களைப் பேசினாலும் ( காதல் உட்பட ) இப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ள ஒரு தடவை மட்டும் பழைய விஷயங்களைச் சொல்வது நல்லது. மீண்டும், மீண்டும் பழைய குப்பையைக் கிளறினால் அதே குப்பையில் உங்கள் காதலும் மூழ்கிவிடும்.

வெட்டிப் பேச்சு :- மற்றவர்களின் ஆடை, யாரெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களைப் பற்றி ஏதேனும்"கமெண்ட்" (விமர்சனம்) தனக்கு மிகவும் பிடித்த நாயகனைப் பற்றி சதா பேச்சு என்று மட்டும் இருந்தால் உங்கள் பாய் ஃபிரண்ட் சீரியஸ் ஆன விஷயம் எதுவும் இவளிடம் இல்லையா? என உங்களிடமிருந்து அவர் ஓடக் கூடும்.

நேரம் தவறாமை : - காத்திருப்பது என்பது எல்லோருக்கும் வெறுப்பு ஏற்றக் கூடிய விஷயம். ஓரளவு தான் யாரும் தாக்குப் பிடிப்பார்கள். அதுவும் விட உங்கள் மீதுள்ள பிரியத்தால் மட்டுமே காத்திருப்பார்கள். அதிகமாகப் போனால் வெறுக்க ஆரம்பிப்பார்கள்.

நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?




அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.

நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது.

சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில், தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது, நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.

நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்?


நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு இதோ ஒரு தேர்வு.
தேர்வு என்றதும் பயப்படாதீர்கள். சாதாரண கேள்விதான்.
தாழிட்ட வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள், தொலைபேசி அடிக்கிறது, உங்கள் குழந்தை அழுகிறது, குழாயில் குடிநீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது, மாடியில் காய வைத்த துணி மழையில் நனையத் துவங்குகிறது.
இதில் முதலில் நீங்கள் எதை எதிர்கொள்வீர்கள்?முடிவை மனதில் தேர்ந்தெடுத்துக் கொண்டு கீழே போங்கள், உங்களைப் பற்றி நாங்கள் சொல்கிறோம்.
முடிவு செய்து வீட்டீர்களா?
நீங்கள் முதலில் தொலைபேசியை எடுத்துப் பேசியிருந்தால் உங்களது வாழ்வில் வேலைக்குத்தான் முக்கியத்துவம் தருவீர்கள்.
அல்லது உங்கள் குழந்தையை சமாதானம் செய்தால் உங்களது குடும்பத்திற்கே அதிக முக்கியத்துவம்.
ஓடிச் சென்று கதவைத் திறந்து பார்த்திருந்தால் உங்களது வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் தான் முன்னிலையில் இருப்பர்.
அதில்லாமல், மாடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணியை கொண்டு வந்திருந்தால், தாம்பத்ய வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீங்கள் வழிந்தோடிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்தினால் பணம், சொத்து தான் உங்கள் முதல் குறிக்கோள்.

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்




1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

2. நிம்மதியாக உறங்கலாம்.

3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.

4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.

5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.

6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.

7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.

8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.

9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.

10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.

போனஸ் :நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.

அறிவுள்ள அமெரிக்கா




அமெரிக்கா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி செயற்கைக்கோளில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்ய முடிவு செய்தது.அப்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை.என்னவென்றால் செயற்கைக்கோளில் உள்ள சர்க்கியூட்களைக் காகிதத்தில் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் விண்வெளியில்தான் ஈர்ப்புவிசை கிடையாதே!.பிறகு எப்படி பேனாவில் இருந்து மை கீழே இறங்கும்? எப்படி காகிதத்தில் எழுதுவது? ஆகவே இதற்கென சிறப்புப் பேனாவை அமைக்க குழு அமைக்கப்பட்டது.

சில மாதங்களில் அவர்களும் விண்வெளியிலும் செயல்படும் பேனாவை வடிவமைத்தார்கள். விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க வீரர்களும் அந்தப் பேனாவை உபயோகித்தார்கள். அமெரிக்காவும் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டதாம்.

ரஷ்யாவும் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடிவு செய்தபோது இந்த விண்வெளியில் எழுதும் பேனாப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பேனாவுக்கென குழு எதுவும் அமைக்கவில்லை.ஏனென்றால் அவர்கள் கொண்டு சென்றது பென்சில்.