ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

நீ!






நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!

**


உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,

குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!

**


உன் நினைவுகளே

வாழ்க்கை
என்றான பிறகு

நீ

தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?

**


குட்டி போடும்

என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..

**


செடி கொடி மரத்தில்

மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!

**


என்ன எழுதினாலும்,

உன்னுடைய
“அவ்வவ்வா”
“ஊஹூம்…”
“டேய் ”
“ப்ச்..ப்ச்..”
“லூஸு”
மணா"    
"உன் முத்தம்"
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!

**


என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...

**


அத்தி பூத்தது...

உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!

**


உன்னிடம் பேச

எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .

**


என்னை கொல்ல

வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

**


மன்னித்து விடு!

நான் உன்னை
ஒருநாள் ஒருகணம்
மறக்க
மறந்துவிட்டேன்….

**


செடியில் பூத்துக்கொண்டே

உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??

கருத்துகள் இல்லை: