ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

கவிதைகள்




இதை நீ படிக்கும்
நொடியில்
நான்
எங்கு இருப்பேன்
என்றறியாவிட்டாலும்,
நிச்சயமாய்
ஒன்று மட்டும்,
இப்பொழுதுகூட
நீ
என் இதயத்தில்தான்
இருக்கிறாய்
..!

*

இப்பொழுதே
என்னை காதலித்துவிடு,
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து
நிறைய
காதலிக்க
வேண்டியிருக்கும்..!


*

பழைய பள்ளிக்கூட
புகைப்படத்தில்,
இன்னும்
புதிதாகவே
இருக்கிறது
முதல்
காதலின் நினைவு..!

அன்றும் இன்றும் என்றும்
புதிதாகவே
இருக்கும்
அந்த முதல் நினைவு

*

நீ என்னுடன்
பேசிச்சென்றதை,
ஒட்டுக்கேட்டு விட்டு
அதை சத்தமாய்
சொல்லிக்கொண்டிருக்கிறது
- காலி வகுப்பறை..!

"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை
தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"


*

"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"


*

"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"


*

கூந்தலின்
இருந்து பிரிந்த
ஒற்றை முடியென

சந்திப்பின் குறுகிய
வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்...

*

என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....

ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?


கருத்துகள் இல்லை: