ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

கவிதைகள்




என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!
--

'போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது' என்றாய்
ச்சே...ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.

கருத்துகள் இல்லை: