ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

நிஜமான கற்பனை…




எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப் போகையிலும் அமைதியாய்
இருந்த என் இல்லம்…

நான் தனிமையில் இருக்கையில்
மட்டும் என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !

என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி !

அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !


ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று நான்
உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கவிதை நல்லா இருக்கு

றிசாந்தன் சொன்னது…

நன்றி