இத்தாலியிலுள்ள மொன்சா என்னுமிடத்தில் அரசன் முதலாம் உம்பர்டொ, அவரது துணையுடன் ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு சாப்பிடும்போது அந்த ஹோட்டல் சொந்தக்காரரும், தானும் உருவ ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்தார். இதைப்பற்றி அதிசயத்துடன் அவர்கள் பேசிக்கொண்டபோது அவர்களுக்குள் இன்னும் பல ஒற்றுமைகளை அறிய முடிந்தது.
1. இரண்டு பேருடைய பிறந்த தினமும் ஒன்று. (மார்ச் 14, 1844)
2. ஒரே ஊரில் பிறந்திருந்தார்கள்.
3. இரண்டு பேருடைய மனைவியரின் பெயரும் மார்கரீடா.
4. அரசன் உம்பர்டூ அரசனாகப் பதவியேற்ற அதே நாளில்தான் அந்த ஹோட்டல்காரரும் தனது ஹோட்டலைத் துவங்கினார்.
5. 29 ஜூலை 1900 அன்று ஹோட்டல் சொந்தக்காரர் மர்மமான முறையில் துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்தார் என்ற செய்தி அரசருக்கு வந்தது. அவர் அந்த இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும்போதே கூட்டத்திலிருந்த ஒரு கொடியவன் அரசனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக