ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

தவளைக்குக் காது கேட்காது




ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் "தாவு" என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார்.

ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது.

அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.

மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது.

கடைசியாக நாலாவது காலையும் அவர் வெட்டிவிட்டு, தாவு என்றார்.

நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர் தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார்,

"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்குக் காது கேட்காது"

இப்படித்தான் பிரச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: