ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

ஆடி மாதப் பரபரப்பும் களமுனை உத்திகளும்



வடபோர்முனையில் கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகையில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா யாழ்.குடா வுக்கும், வன்னிக்கும் தொடர்ச்சியான விஜயங் களை மேற்கொண்டு வருகின்றார்.அவரது பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு 5 மாதங்களே உள்ள நிலையில் வடபோர் முனையில் குறிப்பிடத்தக்க ஒரு முன்நகர்வை மேற்கொண்டுவிடவும், தனது பதவிக்காலத் தில் இராணுவத்தரப்பில் பேரழிவு ஏதும் ஏற் படாதவாறு தடுத்து விடவும் அவர் அதிக சிரத்தை எடுத்து வருவதையே அவரது தொடர் ச்சியான விஜயங்களும் புதிதாக திறக்கப்படும் களமுனைகளும் எடுத்து காட்டுகின்றன.
இலங்கையில் முனைப்பு பெற்ற இனப்பிள வுகள் 1970 களில் மோதல் வடிவம் பெற்ற போதும் அது 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதமே உக்கிரமடைந்திருந்தது. அதன் பின் னர் போர்க்காலத்தில் ஜூலை மாதம் மிகவும் அச்சம் நிறைந்ததாகவே காணப்படுவதுண்டு.
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் திருநெல் வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட் டிருந்தனர். இலங்கை அரசின் அன்றைய வரலாற்றில் பெரும் தொகை படையினரை ஒரு தாக்குதலில் முதன் முத லாக இழந்ததும் ஜூலையில் தான். ஆனால் அதன் பிற்பாடு வந்து போகும் ஒவ்வொரு ஜூலை மாதமும் பெரும் அச்சம் நிறைந்ததா கவே இருப்ப துண்டு.
அதாவது ஜூலையில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் அதிகம்.விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் தோற்றம் பெற்றதும் 1987 ஆடியில்தான். சமச்சீரற்ற போர் (Asymmetric war) என உலகினால் கணிக்கப்பட்ட ஈழப்போரில் இராணுவச் சம நிலையை எட்டவைத்ததில் கரும்புலிகளின் பங்குகள் அதிகமானது.ஜூலை மாதத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.
05.07.1987 நெல்லியடி மத்திய மகாவித்தி யாலயத்தில் அமைந்திருந்த படைமுகாம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல்.
29.07.1987 இந்தியஇலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது.
28.07.1989 இந்தியப்படை இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்த நாள்.
10.07.1990 கொக்காவில் இராணுவ முகாம் தகர்ப்பு.
05.07.1992 இயக்கச்சியில் வை08 இரா ணுவச் சரக்கு விமானம் 20 விமானிகள் மற் றும் சிப்பந்திகளுடன் வெடித்து சிதறியது.
25.07.1993 மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதல், 81 மீ.மீ மோட்டார்கள் முதன் முதலாக கைப்பற்றப்பட்டது.
09.07.1995 இராணுவத்தால் மேற்கொள் ளப்பட்ட முன்நோக்கிப் பாய்தல் நடவடிக்கை, நவாலி தேவாலயம் மீது விமானப்படை மேற் கொண்ட குண்டுவீச்சில் 142 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புக் காரா குண்டுவீச்சு விமானம் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது. புலிப்பாய்ச்சல் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
16.07.1995 காங்கேசன்துறை துறைமுகத் தில் வைத்து எடித்தாரா கட்டளைக்கப்பல் தகர்க்கப்பட்டது.
28.07.1995 மணலாறு இராணுவ முகாம் மீதான தாக்குதல்.
04.07.1996 யாழ்பாணத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் யாழ். நகர தளபதி பிரி கேடியர் ஆனந்த கமான்கொட, காவல்துறை அத்தியட்சர் டயஸ் பலியானார்கள். வீட மைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா காயம் அடைந்தார்.
19.07.1996 முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்ப்பு 1,600 படையினர் பலி, முதன் முறையாக இரண்டு 122 மீ.மீ ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டன. ரணவிரு பீரங்கி கப்பல் தகர்ப்பு.
25.07.1999 Newco Endu-rance கப்பல் தகர்க்கப்பட்டது.30.07.2000 F-5 சுப்பசொனிக் குண்டு வீச்சு விமானம் கட்டுநாயக்காவில் வீழ்ந்து நொறுங்கியது.
24.07.2001 கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீதான கரும்புலித்தாக்குதலில் 3 Kfir C2, 3 K-8 பயிற்சி விமானங்கள், 1 MiG-27, 2 Mi-17 உலங்குவானூர்திகள், 1 Mi24 உலங்குவானூர்தி, 1 Bell-412 உலங்கு வானூர்தி, Airbus-A340, Airbus-A330 என் பன முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் பல விமானங்களும் உலங்குவானூர்திகளும் சேதமடைந்தன.
1991 ஆடி 15 இல் தான் விடுதலைப் புலிகளின் முதலாவது சிறப்புப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி உத்தியோகபூர்மாக தோற்றம் பெற்றிருந்தது.
இவற்றை விட மேலும் பல சிறு தாக்குதல்களும் இந்த மாதத் தில் நடை பெறுவதுண்டு. இந்த நிலையில் இந்த ஆண் டின் ஆடி மாத மும் பரபரப்பு நிறைந்ததாகவே காணப்படு கின்றது.இந்திய உயர் அதிகாரிகளின் திடீர் விஜயம், மேற்குலகின் அழுத்தங்கள் என அரசியல் மற் றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தென்னிலங்கை மக்களின் கவனம் அனைத்தை யும் போரை நோக்கி திசைதிருப்பும் உத்திகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எனினும் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தென்னிலங்கையின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நோக்கத்துடன், பிரதான சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரங்களை அகற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு நல்ல ஒரு சந்தர்ப்பம் என கரு திய அரசு அதனை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பு ஒழுங்குகளில் இறங்கியுள்ளதன் முதற்படி இதுவாகும்.போரினால் நலிவடைந்து வரும் பொருளா தாரம், இனப்பிரச்சினைக்கு அமைதி வழியி லான ஒரு தீர்வு காணப்பட முடியும் என்ற நம் பிக்கைகள் ஏற்படும் போதெல்லாம் உயர் வடைவதுண்டு. கடந்த வாரமும் அவ்வாறே காணப்பட்டது.
தென்னிலங்கையில் தொடர்ச் சியாக நடைபெற்ற குண்டு வெடிப்புக்களினால் வீழ்ச்சி கண்டிருந்த கொழும்பு பங்குசந்தை, இந்திய அதிகாரிகள் சிறப்பு வான்படை விமா னத்தில் வந்து கொழும்பில் இறங்கியதும் புத் துயிர்ப்பு அடைந்திருந்தது. அதாவது மோதல்கள் தணியும் என்ற நம்பிக்கைகள் ஏற்படும் போதெல் லாம் பொருளாதாரம் உயர்வு அடைவதுண்டு.வியாழக்கிழமை (19) 787.2 பில்லியன் ரூபா வாக இருந்த சந்தை முதலீடுகள், மறுநாள் வெள் ளிக்கிழமை (இந்திய அதி காரிகள் வந்து இறங்கிய தினம்) 803.3 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்தது.
சார்க் மாநாடு நடை பெறும் காலப்பகுதியில் வடபோர்முனையை தக்க வைப்பதற்கு இராணுவமும் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. வன்னிக் கள முனைக்கு கடந்த வாரம் (21) விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா மீண்டும் கடந்த வியாழக்கிழமை (26) வவுனியாவுக்கு விஜயம் செய்ததுடன், நடைபெற்று வரும் மோதல்களில் காய மடைந்து சிகிச்சை பெற்றுவரும் இராணுவத்தினரையும் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் டிவிசன் மற்றும் பிரிகேட் தளபதிகளுடன் களநிலமைகள் தொடர்பாக கலந்துரையாடல்களையும் மேற் கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 57 ஆவது டிவிசன் எனப்படும் ஒரு வலிந்த தாக்குதல் படை யணியுடன் ஆரம்பமாகிய வன்னி படை நடவடிக்கை தற்போது, ஐந்து முழுமை யான படையணிகளையும், மூன்று படை யணிகளின் சில பற்றாலியன்களையும் உள்வாங்கியுள்ளது.மன்னார் களமுனையிலும், வன்னியின் மேற்குபுறமும் 57, 58 (Task Force 1), 61 ஆகிய மூன்று படையணிகளும், மண லாற்றில் 59ஆவது படையணியும், ஏ9நெடுஞ்சாலைக்கு கிழக்காக நடவடிக்கை படையணி (Task Force 11) எனப்படும் படையணியும் கள மிறங்கியுள்ள நிலையில் அவர்களுக்கான பின்தள உதவிகளை வவுனியாவின் மேற்கு பகுதிகளில் 56 ஆவது படையணியும், மணலாற்று களமுனையில் 22ஆவது படை யணியும் மன்னார் களமுனையில் 21 ஆவது படையணியும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இராணுவக் கட்டமைப்பில் டிவிசன்கள் தலா 7,000 தொடக் கம் 9,000 இராணு வத்தினரை கொண்டுள்ள போதும், தற் போது உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கை படையணி டிவிசனை விடச் சிறியது. இது ஏறத்தாள 3,000 படை யினரை கொண்டுள் ளது. ஒட்டுமொத்தமாக நோக்கின் பரந்த கள முனைகள் திறக்கப்பட்டுள்ள வன்னி கள முனையில் தற்போது ஏறத்தாள 40,000 படை யினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து மணலாறு வரை நீண்டு போயுள்ள இந்த களமுனைகளில் நகரும் படை யினரால் கைப்பற்றப்படும் பிரதேசங்களை தக்கவைப்பதற்கு பெருமளவான படைப்பலம் தேவை. எனவே தான் அரசு தொடர்ச்சியாக இராணுவத் திற்கான படை சேர்ப்புக்களையும், படையில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கான பொது மன் னிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றது.இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்க ளில் 12,000 பேரை மீள சேர்ப்பதற்கு கடந்த மாதம் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பின்னர் தற்போது அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது. படை யில் இருந்து தப்பி சென்ற 51,000 பேரையும் அவர்களின் சுயவிருப்பின் பேரில் விலக்கிக் கொள்ள 2003 ஆம் ஆண்டில் அரசு முடி வெடுத்திருந்த போதும், தற்போது அதில் இருந்து அரசு விலகியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.இழுபட்டு செல்லும் மோதல்கள், போர் முனையில் ஏற்படும் இழப்புகள் என்பவை படையில் இளைஞர்கள் இணைந்து கொள் வதை மந்த நிலைக்கு தள்ளிய வரலாறு உலக வல்லரசான அமெரிக்காவில்கூட நடந்திருக்கிறது.ஈராக்கில் இருந்து வரும் படையினரின் சடலங்கள் அமெரிக்க இராணுவத்தின் படை சேர்ப்பையும் அதிகம் பாதித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனை நிவர்த்தி செய்வதற் காக அமெரிக்க அரசு படையில் சேர்வதற்கான கல்வி தகைமைகளை குறைத்துள்ளதுடன், படையில் இருந்து சுயமாக விலகிக் கொள்ளும் வயது எல்லையையும் 35 இல் இருந்து 42 ஆக அதிகரித்துள்ளது.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் படையினரின் பல முனை தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் அவர்களின் கவனத்தை சிதறடிப்பதற்குமான பல உத்திகளை வகுத்து வருவதுடன், வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு தயாராகி வருவதாகவும் வன்னி தகவல் கள் தெரிவிக்கின்றன.
மன்னார் களமுனையை எதிர்கொள்வதற்கு பூநகரி படையணி என்ற படையணி ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.மன்னார் களமுனைகளில் இந்த படையணி களமிறங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரித் தானியாவின் இராணுவக்கட்டமைப்பில் றோயல் ஐரிஸ் றெஜிமென்ட் ( The Royal Irish Regiment), ஸ்கொட்லாந்து டிவிசன் (The Scottish Division) பிறின்சஸ் ஒப் வேல்ஸ் டிவிசன் (The Prince of Wales Division) என்ற படையணிகள் உள்ளதை போலவே பூநகரி படையணி உருவாக்கம் அமைந்துள்ளது.
இது தவிர கிழக்கு மாகாணத்தில் தரையிறங் கியுள்ள விடுதலைப்புலிகளின் ஜெயந்தன் படையணியின் இரு கொம்பனி அணிகள் அங்கு தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளதும் படையினரின் ஒழுங்கமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற கிளைமோர் மற் றும் குண்டு தாக்குதல்களில் பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கு இழப் புக்களை சந்தித்துள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் தமது தாக்குதல்களை விரிவுபடுத்த உள்ளதாக விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண சிறப்பு தளபதி கீர்த்தி அண்மையில் தெரிவித்த கருத் தும் இதனையே உறுதிப்படுத்தியுள்ளது. தற் போது கிழக்கில் படைமுகாம்களும், காவல் நிலைகளும் அதிகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான படை வளங்களை எங்கி ருந்து திரட்டுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் யாழ்.குடா மீதான தாக்குதல் அச்சம் அதிகரித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.படையினரின் அதிக வளங்களும், சூட்டு வலுவும் வன்னியில் குவிக்கப்பட்டுள்ள நிலை யில் விடுதலைப்புலிகள் புதிதாக ஒரு கள முனையை திறந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரம் யாழ்.குடா மீது விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டால் அதனை முறியடிக்கும் உத்திகளையும் படையி னர் அதிக சிரத்தையுடன் மேற்கொண்டுவரு கின்றனர்.
இராணுவத்தின் தாக்குதல் படையணிகளில் கணிசமானவை வன்னி களமுனைக்கு நகர்த் தப்பட்டுள்ளன. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலை தடுப்பதற்கு எந்த களமுனைகளில் இருந்து படையினரை நகர்த்துவது என்ற குழப்பமும் ஏற்படலாம்.
நன்றி : அருஷ்

கருத்துகள் இல்லை: