ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

நாத்திகம் என்றால் என்ன?

நாத்திகக் கருத்தைச் சரியாக புரிந்து கொண்டால்,
அது ஒரு நம்பிக்கை இன்மையோ, இழிவானதோ, வெறும் எதிர்மறைக் கருத்தோ இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கு மாறாக, அனைத்து உண்மைகள் பற்றிய மனமார்ந்த, பயன்நிறைந்த உறுதிப்பாடுதான் அது என்பதையும் மிக உயர்ந்த மனிதநேய செயல்பாட்டின் ஆக்கபூர்வ உறுதிப்பாட்டைக் கொண்டது என்பதையும் உணரலாம்.
கடவுள் என்பது இல்லை என்று நாத்திகர் கூறுவதில்லை. ஆனால், கடவுள் என்று எதைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. கடவுளைப் பற்றிய எந்த கருத்தும் அற்றவனாக நான் உள்ளேன். கடவுள் என்னும் சொல் தெளிவான திட்டவட்டமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் ஒலிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கடவுள் இல்லை என்று நான் மறுக்கவில்லை. அத்தகைய கடவுள் என்ற எந்தக் கருத்தையும் நான் கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் மறுக்க முடியாது என்பதே அதன் காரணம்.
கடவுளைப் பற்றி ஆத்திகரால் விளக்கிக் கூற முடியவில்லை. கடவுள் என்ற கருத்தை உறுதிபடக் கூறுபவரால் அதனைப் பற்றி எனக்கு விளக்கிக் கூற இயலவில்லை. என் உருவத்தில் நான் இருப்பதைத் தவிர கடவுள் என்ற உருவத்தில் ஒருவர் இருக்கிறார் என்று கூறப்படுமானால் அத்தகைய ஒன்று இருக்க இயலும் என்பதை நான் மறுக்கிறேன்.
ஆன்மிகவாதியும் ஒரே ஒரு உயிர் தான் இருக்க முடியும் என்பதையும் ஒன்றுக்கு மேற்பட்ட மற்றொன்று இருக்க இயலாது என்பதையும் உறுதிபடக் கூறுகிறார். ஆனால் ஆன்மிகவாதியின் இந்தக் கருத்துக்கும் நாத்திகரின் கருத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், ஆத்திகர் கடவுள் இருப்பதற்கான காரணங்களை கூறும் போது, நாத்திகரோ உயிரினப் பண்புகளின் வெளிப்பாடுகளே இவை, அதாவது சிந்தனையைச் செப்பமிடச் செய்யும் வேறுபாடுகள் இவை என உறுதி படக்கூறுகிறார்.
பிரபஞ்சம் என்று கூறப்படுவதில் இருந்து விலகி, அதைத் தவிர்த்து இருப்பதே கடவுள் என்று ஆத்திகர் உறுதிபடக் கூறும் போது, இத்தகைய தனிப்பட்ட, கற்பனையில் இருக்கும் கடவுளுக்கு தனித்தன்மை, எங்கும் நிறைந்தவர், அனைத்தும் அறிந்தவர், எதையும் செய்ய வல்லவர், மூல முதலானவர், என்றும் நிலைத்து நிற்பவர், மாற்றப்பட இயலாதவர், குற்றம் குறையற்ற நற்றண்மை கொண்டவர் என்றெல்லாம் குணங்களை ஆத்திகர் கற்பித்துக் கூறும் போது,நாத்திகர், “அத்தகைய கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதையே நான் மறுக்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.
இவ்வாறு தன் கருத்தைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. கடவுளைப் பற்றிய ஆத்திகரின் விளக்கம் முன்னுக்குப் பின் முரணானது.இந்தக் கடவுள் பற்றிய ஆன்மிகவாதியின் விளக்கமே முன்னுக்குப் பின் முரணானதும், மனிதரின் அன்றாட வாழ்க்கை அனுபவத்துக்கு எதிரானது என்பதும்தான் இதன் காரணம். உலகைப் படைத்தவர் கடவுள் என்று ஒரு நாத்திகரிடம் பேசினால், படைப்பு என்ற கருத்தே நடந்திருக்க இயலாதது என்று கூறுவார்.கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை நிறுவிட இது அதிகப்படுத்தவோ, குறைக்கவோ இயலும் என்பதை சிந்தித்துப் பார்க்கவும் நம்மால் இயலவில்லை. இக்கருத்து எவ்வாறு உருவானது என்பதையும் நம்மால் எண்ணிப் பார்க்க இயலவில்லை.
ஒன்றுமே இல்லாதது ஏதேனும் ஒன்றாக ஆவதையோ அல்லது ஏதோ ஒன்று ஒன்றுமே இல்லாததாக ஆகிவிடுவதையோ நம்மால் கருதிப் பார்க்க இயலவில்லை.
நன்றி : சார்லஸ் பிராட்லா

கருத்துகள் இல்லை: